Wednesday, May 28, 2008

கிராமத்துக் காதல் கதைகள் -1 கருச ஊரணிக கரையினிலே பாகம்-2

கிராமத்துக் காதல் கதைகள்-1 கருச ஊரணிக் கரையினிலே பாகம்-1

ஊரணியில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித் தனி 'துறை" உண்டு. ஆனால் அவைகளுக்கிடையேயான இடைவெளி மிகவும் குறைவு.கணவன் மனைவிக்கிடையே "சோப்பு" பரிமாற்றிக் கொள்ளக் கூடிய இடைவெளியே இருக்கும்.

அவள் அக்கரையில் கால் வைத்தது முதல் குளித்துவிட்டு கரையேறி மறையும் வரை அவளை அக்கறையுடன்((??!!) பார்த்துக் கொண்டோயிருப்பான்.அவள் சோப்பு போடும் பொழுது மட்டும் அவளுக்கு "தெரிவது" போல் மரியாதை நிமித்தமாக வேறு பக்கம் திரும்பிக்கொள்வான்.(அப்படியாவது தன்னை நல்லவன் என்று நினைத்து காதலிக்க மாட்டாளா? )

அவளை ஒரு நாள் பார்க்கவில்லை என்றாலும் அவனால் நிம்மதியாக உண்டு,உறங்க முடியவில்லை.(காலில் இருந்து வளர ஆரம்பித்த காதல் செடி அவன் நெஞ்சை தொட்டுவிட்டதை அவனும் உணர்ந்தான்),



திடீரென பெண்கள் அனைவரும் அந்த ஊரணியில் புதியதுறை கண்டு அங்கு குளிக்க போய் விட்டனர்,அது சற்றுதொலைவில்... இல்லை இல்லை.. அதிகப்படியான தொலைவில் இருந்தது. ஆனால் அவளும் அவள் தோழிகளும் தொடர்ந்து பழைய துறையில் குளித்தது அவனுக்கு ஆறுதலாக இருந்தது.

அவன் பயந்தது நடந்தே விட்டது ஆம்! சில சமூக விரோதிகள்(??!) பெண்கள் பகுதியிலிருந்த கல்லை(பெண்கள் துவைப்பதற்கும்,மஞ்சள் உரசுவதற்கும் பயன்படுத்தும் கல்)எடுத்து அந்த புதிய துறையில் வைத்துவிட்டனர்(பாவம் யாரோ யாருக்காகவோ!!!),

அவன் வழக்கம் போல் 5 மணிக்கு காத்திருந்தான்,அவளும் வந்தால், ஆனால் அவள் புதிய துறைக்கு சென்று விட்டால்,அவன் குளிக்கும் இடத்திலிருந்து அவளை பார்ப்பது கடினமாகவே இருந்தது,இதற்கு ஒரு முடிவு கட்ட எண்ணிய அவன் தன்னுடைய 3 சேக்காளிகளையும் ழைத்துக் கொண்டு யாருமற்ற இரவு நேரத்தில் அந்த கல்லை பழைய இடத்திற்க்கே கொண்டுவந்து சேர்த்தான்.அவளும் அங்கு தொடர்ந்து வர ஆரம்பித்தாள்,

<

படித்துவிட்டு கிராமத்தில் இப்படி சந்தோசமாக இருந்த சமயத்தில் தான் அவனுடைய அப்பா அவனை எதாவது வேலைக்கு போக சொல்லி "தொந்தரவு" கொடுக்க ஆரம்பித்தார்.அவள் கல்லூரி இருக்கும் மாவட்ட தலைநகரத்திலேயே வேலை தேடினால் என்ன என்று யோசிக்க ஆரம்பித்தான்.

தீவிர தேடலுக்குப்(??!)பின் ஒரு வேலை கிடத்தது அதுவும் அவள் கல்லூரியை சுற்றி உள்ள COMPLEX-ல், புதிதாக வேலைக்கு சேர்ந்த இடத்தில்,கொஞ்ச நாளைக்கு சம்பளம் கிடையாது சும்மா TRAINIE-ஆக மட்டும் வேலை பார்க்க சம்மதமா என்றார்கள்(உங்களிடம் வேலை பார்ப்பதற்க்கு உங்களுக்கு நான் வேண்டுமானால் சம்பளம் தருகிறேன்! என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்),

நாட்கள் வேகமாக நகர ஆரம்பித்தது, அவளும் இரண்டாம் ஆண்டு படிக்க ஆரம்பித்தால், அப்பொழுதும் அவன் அதே TRAINIE நிலையிலேயே இருந்தான், அவனால் குடும்பத்திற்கு வருமானம் எதுவும் இல்லையென்றாலும் தொந்தரவு பண்ணாமல் தினமும் வேலைக்குச் சென்றதே பெரிய விசயம் என வீட்டில் இருப்பவர்களும் அவனை தண்ணீர் தெளித்து விட்டனர்


இப்பொழுதெல்லாம் நான் தினமும் வேலைக்கு
செல்வதை நினைத்து சந்தோஷப்படுகிறாள் என் தாய்...
பாவம் அவளுக்கு எப்படி தெரியும்
என்னவளைப் பார்ப்பது மட்டுமே என்
முழுநேர வேலை என்பது...

என்று சந்தோசமாக இருந்தான், வில்லன் இல்லாத காதல் கதையா?

அன்புடன்....
சரவணன்.