Wednesday, May 28, 2008

கிராமத்துக் காதல்கதைகள்-1 - கருச ஊரணிக்கரையினிலே-பாகம் 1

அவன் அப்பொழுது தான் கோயம்புத்தூரில் கல்லூரிப் படிப்பை முடித்திருந்தான்.அவள் அருகிலுள்ள செங்கற்படை கிராமத்தை சேர்ந்தவள், அவர்களது மாவட்ட தலைநகரமான இராமநாதபுரத்தில் அரசு பெண்கள் கல்லூரியில் முதலாமாண்டு ஆண்டு சேர்ந்திருந்தாள்.

அவனைப் பொருத்தவரை அவள் ஒரு பொருட்டேயில்லை,அவன் அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் அவள் என்பது மட்டுமே,கல்லூரிப் படிப்பை முடித்து ஜாலியாக நண்பர்களுடன் ஊர் சுற்றுவதும், பக்கத்து கிராமங்களுக்கு சென்று கிரிக்கெட் விளளயாடுவதும் மட்டுமே அப்பொழுதைய வேலைஅவனுக்கு.

அப்பொழுது தான் அவனிடன் அவன் நண்பர்கள் "மாப்ள நம்ப ஊர்ல இருந்து காலேஜ் போய் படிக்கிறது அவ மட்டும் தான் ஆளும் நல்லா இருக்கிறா, உனக்கு கண்டிப்பா செட் ஆகும்டா" ஒருவன் மண்வெட்டியால் வெட்ட ஆரம்பித்தான்.

" உனக்கு சொந்தகாரப்புள்ள வேற அதனால நிச்சயம் உனக்கு தாண்டா" அடுத்தவன் விதையைப் போட்டான்.

"நேத்து பார்த்தேன்டா அவ பஸ்ல இருந்து உன்னை தான் லுக் அடிச்சிக்கிட்டு இருந்தா மாப்ள"அடுத்தவன் மண் போட்டு மூடினான்.

அவனுக்கு விருப்பமில்லாமலேயே அவனுள் காதல் விதை பயிரிடப்பட்டது. பின் அவனும் யோசிக்க ஆரம்பித்தான், நாம் அவளை காதலித்தால் என்ன தப்பு?( ஆஹா... இந்தா ஆரம்பிச்சுடான்ல).

அவள் பின்னால் அவன் சுற்ற ஆரம்பித்தான்.அதுவரை யாரோவாய் இருந்த அவள் பிறகு தவிர்க்கமுடியாத யாவுமாகிவிட்டாள்,


அவன் காதல்வயப்படுவதற்க்கு முன்பொல்லாம் அவள் முன்னிலையில் சாதாரணமாக வயற்காட்டிலிருந்து சைக்கிளில் பருத்தி மூட்டையையும், மிளகாய் மூட்டையையும், எடுத்துவரும் அவன், பின்னாட்களில் அவள் முன்னால் சைக்கிளில் செல்வதையே தவிர்த்தான்,அவள் வருவதை தூரத்தில் கண்டு கொண்டால் "கருவ"மரத்தினடியில் சைக்கிளை விட்டுவிட்டு தலைமறைவாகி பின் அவள் சென்ற பிறகே சைக்கிளுடன் வீடு வந்து சேர்வான்,அவள் முன்னால் சைக்கிளில் செல்வதையே ஒரு மானப் பிரச்சனையாகவே அவன் கருதினான்.

அதற்குமுன் அவள் கிராமத்திற்க்கு அதிகமாக செல்லாத அவன், பின்னாட்களில் அவளின் கிராமத்தில் எந்த ஒரு விழா என்றாலும் முதல் ஆளாக அவன் இருப்பான், அவனுள் பதியமிடப்பட்ட செடி வளர ஆரம்பித்தது,

அவள் தினமும் மாலை 5 மணிக்கு இருவரின் கிராமத்திற்கும் பொதுவான "கருசூரணி"க்கு(கரிசல் பூமியில் உருவான ஊரணி அதனால் அது கரிசல் ஊரணி,பின்னாட்களில் அது மறுவி கருசூரணி ஆயிற்று.)அவளின் தோழிகள் புடைசூழ, புடவைகள் சூழ குளிக்க வருவாள்.



அவள் குளிக்க வரும் அந்த மாலை 5 மணிக்காக, அவன் காலை 5 மணிக்கெல்லாம் எழுந்து யோசிக்க ஆரம்பித்தான்,அவன் எங்கிருந்தாலும் மாலை 5 மணிக்கு கருசூரணியில் ஆஜராகிவிடுவான்.

சில நாட்களில் வெளியூர் சென்று கிரிக்கெட் விளையாடினாலும் சரி மாலைநேரம் எனில் , நடுவரிசை batsman ஆன அவன், அனைவரின் எதிர்ப்பையும் மீறி முதல் ஆளாக களமிறங்கி, அனைவரும் எதிர்பாத்ததுபோல அவுட் ஆகி மகிழ்ச்சியுடன் வெளியேறி ரத்தினா பஸ்ஸ பிடிச்சாவது 5மணிக்குள் வந்துவிடுவான்.(பின்னாட்களில் காதல் செடியை பதியமிட்ட அவனது சக கிரிக்கெட் நணபர்கள் தங்களுக்குள் வருத்தப்பட்டுக் கொண்டார்கள்).

கருசூரணி சற்று அகலமாக பெரிய அளவில் இருக்கும், அவள் ஊரைக்கடந்து அந்த ஊரணியின் கரையில் அவள் காலடி எடுத்து வைத்ததும் தான் அவன் இதயம் துடிக்க ஆரம்பிக்கும், அதை அவன் மிகவும் ரசிக்க ஆரம்பித்தான். அவள் நடந்து வரும் பொழுது கேட்கும் கொலுசு ஒலியே அவன் தேசியகீதம் ஆயிற்று. தனை மறந்து தண்ணீரில் அவள் வருகைக்காகா காத்துக்கொண்டிருப்பான்.

அவள் குளித்துவிட்டு வீடு நோக்கி கரையில் நடந்து,அவள் உருவம் மறையும் வரை வேறு சிந்தனையே அவனுக்கு இருக்காது, என்னதான் வெளியூரில் படித்தாலும் அவனும் ஒரு வெள்ளந்தியான கிராமத்தான் தான், வேறு எந்தவிதமான எண்ணமும் இன்றி அவளையே திருமணம் செய்து கொள்ளூம் நோக்குடன் முழுமையாக காதலித்தான்.

அப்பொழுதெல்லாம் நிலவு,சூரியன், கடல், வானம்,பூ என்று உளரலான கவிதை (அய்யனார்(??!!))வேறு புனைய முயன்றுகொண்டிருந்தான்.(பிற்காலத்தில் உளரல் வேறுமாதிரி இருக்கும் என்பதை அறியாமல்)

அன்புடன்...

சரவணன்.

1 பின்னூட்டங்கள்:-:

said...

(இராம்/Raam)

//யாருப்ப்பா இது புதுசா இருக்கு... :) //

அடப் பாவி ராயலு, ஏங் கேக்க மாட்ட நீ! சித்திரத் திருவிழாவுக்கு வாடேனு கூட்டீட்டுப் போயி,மதுர ஆத்துக்குள்ள தொலச்சுபுட்ட, நானே இப்போத் தான் திரும்ப வந்திருக்கேன்.

//(குமரன் (Kumaran)) //

என்னப்பூ கதை பாதியில நிக்குது? ஓ பாகம் 1ஆ? சரி சரி...

ஆமா குமரன், அடுத்த பாகமும் வருது!


அன்புடன்...
சரவணன்.