Tuesday, May 8, 2007

கிராம இருப்பிடமும் , சுற்று வட்டாரப் பகுதிகளும்

எங்க ஊரப் பத்தி நீங்க எங்கயும் தெரிஞ்சிருச்க முடியாது,மேப்புலயும் பாத்துருக்க முடியாது வேனுமுனா நாஞ் சொல்லுறேன் எங்கேனு தெரிஞ்சுக்கங்க!

எனது கிராமம் பற்றிய.பழைய பதிவில் எனது ஊரின் பெயர் வளநாடு என்றே குறிப்பிட்டுள்ளேன்,ஆனால் எனது வீடு இருப்பது தெய்வதானம் என்னும் சிறிய பகுதியில்.வளநாடே எங்களது தாய்கிராமம் இரண்டிற்கும் இடைவெளி கிடையாது, தொடர்ச்சியாக வீடுகள்.தெய்வதானம் உருவாகி ஒரு 30 ஆண்டுகள் தான் ஆகியிருக்கலாம், இப்பொழுதும் வயக்காட்டிற்குப் போகும் பொழுது சிதிலமடைந்திருக்கும் ஒரு வீட்டக் காட்டி, எங்கப்பா, என்னிடம் இதுதான் மொதவீடு, நம்ம தெய்வதானதுக்கு மொத மொதலாக வந்த வீடுனு சொல்லுவாக.
இப்பொழுதுவரை ஒரு சந்தேகம்,யாரு ஊரின் பெயரை முடிவு செய்வது? எனது கிராமத்திற்கு பெயர்வைத்தவர் யாரென்று இதுவரைத் தெரியாது.அதேபோல் தெய்வதானம் என்றால் என்ன அர்த்தம் என்பதும் புரியவில்லை( தெய்வம் தானமாக கொடுத்த கிராமம் என்றா? இல்லை தெய்வத்திற்கு தானம் கொடுத்த கிராமம் என்றா?)வளநாட்டிற்கும் தெய்வதானத்திற்கும் இடைவெளியோ, வேறுபாடோ கிடையாது.இப்பொழுதும் பேருந்துகளில் டிக்கெட் எடுக்கும் போதும்.வீட்டிற்கு எப்பொழுதவது எழுதப்படும் கடிதத்திலும் எங்களுக்கான முகவரி வளநாடே, என்வே இனி வரும் பதிவுகளில் என் கிராமத்தின் பெயர் வளநாடு என்றே குறிப்பிடப் படலாம்

தெய்வதானம் கண்மாய்க்கரையில் அமைந்துள்ளது. கம்மாய்க்குள் இருக்கும் இரு கிருஸ்துவ கிராமங்கள் புஸ்போனம்(புஸ்ப வனம்), பொன்னக்கரை. தெய்வதாம் கிராமத்தைப் பார்த்து நிற்கும் பொழுது நொட்டாங்கப் பக்கம்(வடக்குப் பக்கம்)வளநாடு, இந்திரா நகர், காலனி, செபஸ்தியார்புரம், சேமனூர், மற்றும் கிராமமாக இருந்து நகரமாக வளர்ந்துவரும் சத்திரக்குடி.மதுரை-இராமேஸ்வரம் மெயின் ரோட்டில் சத்திரக்குடி உள்ளது!

தெய்வதானத்திலிருந்து சோத்தாங்கைப் பக்கமா(தெற்குப்பக்கம்) பாத்தா! செங்கற்படை, தேரிருவேலி, கருமல்,காக்கூர்,கடைசியா எங்கவூரின் தாலுகாவான முதுகுளத்தூர்.

எனக்கு வெவரம் தெரிஞ்ச நாள்ள இருந்து முதுகுளத்தூர் இப்படியேத் தான் இருக்கு.சாதித் தலைவர்களின் சிலைகள் ரெண்டு மூனு மட்டும் கூடி இருக்கு, அப்போத் தானே சிலையின் தலையில் செருப்பு மாலை போட்டு ஏன்னு?கேட்க வருபவனின் தலையைத் தரையில் உருளச் செய்ய முடியும்,இவய்ங்க திருந்தவே மட்டாய்ங்க,எப்பவுமே இப்படித்தான். இதுதான் என் கிராம இருப்பிடம்.


அன்புடன்...
சரவணன்

3 பின்னூட்டங்கள்:-:

said...

சோதனைப் பின்னூட்டம்

said...

இன்னுமா தலைப்ப மாத்தலை?

said...

சரா இன்னும்மா அடுத்த பதிவு போடலை?