Tuesday, May 8, 2007

கிராமத்துப் பக்கங்கள்- இதில் வரும் பதிவுகள் பற்றி



எனது கிராமத்தில் நான் பார்த்த பல விசயங்களையும் கேட்ட செய்திகளையும், அனுபவித்த கிராம வாழ்க்கையையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இந்தப் பக்கங்கள்! இதில் வரும் பதிவுகளில் 95% உண்மையானவைகளே ஒரு 5% மட்டும் சுவாரஸ்யத்திற்கு தாளித்து எழுதப்படலாம்(நிச்சயமாக அல்ல, எழுதப்படலாம்).

இந்தப் பக்கங்களில் உள்ள பதிவுகளின் நோக்கம் கிராம வாழ்க்கை அனுபவித்திடாத அதே நேரம் அறிந்தாவது கொள்ளலாமே என்ற ஆர்வமாயிருக்கின்ற புதியவர்களுக்கும்,தங்களின் கிராமத்து நினைவுகளை புதுப்பித்து பால்ய நினைவுகளை மலரச் செய்ய பழையவர்களுக்கும் பயன்படும் என்பதற்கான எனது ஒரு சிறுமுயற்சி இந்தக் கிராமத்துப் பக்கங்கள்!



கிராமம் - ஜாதியம் இல்லாமல் இருக்காது! இங்கு ஜாதீயம் என்பது ஒருவரை பழித்துச் சொல்வதற்கு அல்ல,அவரை அடையாளைப் படுத்தவே பயன்படுகிறது,

உதாரணத்திற்கு என் அப்பாவைத் தேடிவரும் கணேசன் அப்பாவைக் காணமுடியாமல் சென்று, சிறிதுநேரத்தில் வீடு வரும் என் அப்பாவிடம் கணேசன் வந்தார் என்றால் எந்தக் கணேசன்?என்பார்(கிராமங்களில் சில பெயர்கள் மட்டுமே திரும்பத்திரும்ப பலருக்கும் வைக்கப்படும்) ஏனென்றால் எங்கள் ஊரில் வண்ணாவீட்டு கணேசன் உண்டு , பள்ளவீட்டு கணேசன் உண்டு,கீதாரி(கோனார்) கணேசன் உண்டு. இது போன்ற சமயங்களில் ஜாதி சொல்லியே சொல்வது வழக்கம். ஆமாப்பா, வண்ணாவீட்டு கணேசன் வந்துச்சு, துணி தேச்சாதுக்கு காசு கேட்டுச்சு என்பவை உதாரணங்கள்.
நிச்சயம் யாருடைய மனதையும் புண்படுத்தும்படியாகவோ அல்லது எதிர்கருத்துக்களுடன் விவாதிக்கும் படியாகவோ இருக்காது!

என் கிராமத்தைப் பொருத்தவரையில் அனைத்துஜாதியினரும் உண்டு, ஆசாரியில் இராமலிங்கஆசாரி ஐயா குடும்பம் மட்டுமே இருந்தது, இப்பொழுது இல்லை, ஜெயராஜ் நாடாரின் குடும்பம் மட்டுமே அவரின் இனத்தில், (நாடார் ஐயாவைப் பாக்கும் பொழுதெல்லாம் எனக்கு கள்ளிக்காட்டு இதிகாசத்தில் வரும் சைக்கிள் நாடார்தான் நினைவுக்கு வருவார், நாவலில் வருவது போன்று எப்பொழுதும் உள்ளூர் செய்திகளுடன் சைக்கிளில் வருபவர்). நாயக்கர், கவுண்டர் போன்ற ஜாதியினர் எங்கள் மாவட்டதிலேயே(இராமநாதபுரம் மாவட்டம்) இல்லை என்றே நினைக்கின்றேன்.


அன்புடன்...
சரவணன்.

1 பின்னூட்டங்கள்:-:

said...

சோதனைப் பின்னூட்டம்!